வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (12:03 IST)

சிவசேனா கட்சியை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்:தீர்மானத்தை தாக்கல் செய்தது பாக். மக்கள் கட்சி

சிவசேனாவை தீவிரவாத இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலகத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.


 

 
பாகிஸ்தான் மீதான எதிர்ப்பு மனப்பாங்கில் சிவசேனா கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாக பாகிஸ்தான் இசைக் கலைஞர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுச் செயலரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்த குல்கர்னி மீது கருப்பு மை வீச்சு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஆலோசனை நடத்த வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் என இந்தப் பட்டியல் நீளும்.
 
இந்நிலையில் சிவசேனா கட்சியை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கக் கோரி பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலகத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.

சிவசேனாவின் செயல்பாட்டை சர்வதேச அளவிற்கு எடுத்து சென்று, தீவிரவாத இயக்கமாக அறிவிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி கேட்டுக் கொண்டு உள்ளது.தீர்மானமானது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் 5 பேர் அடங்கிய குழுவினால் நேற்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.