வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : சனி, 3 மே 2014 (15:18 IST)

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துக்கொண்டதால் பூனம் பாண்டே கைது

பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துக்கொண்டதால் மும்பையில் கைது செய்யப்பட்டார். 

பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே அவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக இணையதளங்களில் வெளியிட்டு அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்துபவர்.
 

கடந்த ஆண்டு வெளியான ‘நஷா’ இந்திப் படத்தில் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்த இவர் பொது இடத்தில் அநாகரீகமாக கொண்டதாக கூறி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வெளியான செய்தியில், மும்பை மிரா சாலையில், பூனம் பாண்டே  பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பூனம் பாண்டே நின்றுக்கொண்டிருக்கும் காரில், பாடல்களை கேட்பது ஒரு குற்றமா? நான் காரில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தேன் என அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.