மேற்கு வங்க மாநிலம் மால்தா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறி, போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலை 12-ஐ முற்றுகையிட்டனர். ஜாதுபூர் பைபாஸ் பகுதியில் காவல்துறையினர் தலையிட்டபோது, ஆவேசமடைந்த கும்பல் காவல் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியது. இதில் வாகன ஓட்டுநர் தலையில் பலத்த காயமடைந்தார். ...