1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 மே 2020 (18:14 IST)

விமானிக்கு கொரோனா… நடுவானில் தெரிந்த உண்மை – பயணிகள் தவிப்பு!

ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக மாஸ்கோ சென்ற விமானத்தின் விமானிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து விமானம் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்துவர வந்தே பாரத் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானமமான ஏ-320 நியோ விமானம் மாஸ்கோவுக்கு டெல்லியிலிருந்து இன்று புறப்பட்டது. ஆனால் அதில் சென்ற விமானி ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து உஸ்பெகிஸ்தான் வரை சென்ற விமானம் மீண்டும் இந்தியாவுக்கே வர உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட விமானியைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த விமானக் குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மாஸ்கோவில் இருக்கும் இந்தியர்களை மீட்க வேறு விமானம் அனுப்பப்படும் என சொல்லப்படுகிறது.