வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (16:28 IST)

அயோத்தி தீர்ப்பு; மறு சீராய்வு மனு தாக்கல்

அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் எனவும், மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் கடந்த மாதம் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து மவுலானா சையது ஆஷாத் என்பவர் 217 பக்கங்கள் கொண்ட சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் மூல மனு தாரர் சித்திக்கின் மகனாவார்.