வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 15 ஜூலை 2014 (19:46 IST)

சென்னையில் பாஸ்போர்ட் மேளா

சென்னையில் 2014 ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை பாஸ்போர்ட் மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பாஸ்போர்ட் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தப் பாஸ்போர்ம் மேளா அமைக்கப்பட்டுள்ளது. 
 
பாஸ்போர்ட் மேளா நடக்கும் நாளில் சாலிகிராமம், தாம்பரம் மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்ற வேலை நாட்களைப் போலவே இயங்கும். அப்போது விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த மேளாவில் கிட்டதட்ட 1600 விண்ணப்பதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்தப் பாஸ்போர்ட் மேளாவில் பங்குபெற விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் இணையத்தளம் மூலம் கட்டணம் செலுத்தி அவர்களின் நேரத்தை நியமணம் செய்துகொள்ள வேண்டும். இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் பதிவு எண்ணைக் குறித்துக்கொள்ள வேண்டும். 
 
பாஸ்போர்ட் மேளாவிற்கு வரும்போது விண்ணப்பப் பதிவு எண், நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத் தகவல்களை எடுத்து வரவேண்டும். மேலும், தேவைப்படும் ஆவணங்கள் அசல் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களையும் எடுத்துவர வேண்டும். 
 
பாஸ்போர்ட் மேளா அன்று வழக்கமான பிரிவில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தக்கல் முறை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படாது. மேளா அன்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் விவரம் 2014 ஜூலை 22ஆம் தேதி வெளியிடப்படும்.