வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2017 (12:05 IST)

போதை தலைக்கேறி நடுவானில் விமானத்தின் கதவை திறந்த பயணி!!

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணித்த ரஷ்யர் ஒருவர் குடிபோதையில் சக பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.


 
 
ஒரு கட்டத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் கதவை திறக்க முயன்றார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
உடனே, இது குறித்து டெல்லியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும்  பாதுகாப்பு படை வீரர்கள், ரஷிய பயணியை பிடித்து சென்றனர். 
 
விமானத்தில் பயணிகளுக்கு இடையூறாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்டதாக ரஷிய பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.