1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (12:44 IST)

பான் கார்டு ஒதுக்கீடு செய்யும் பணி 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு

மென்பொருள் மேம்படுத்தும் பணியை முன்னிட்டு பான் கார்டு ஒதுக்கீடு செய்யும் பணி 5 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 


 
 
வருமான வரி தாக்கல் செய்வதற்கு அத்தியாவசியமானது பான் கார்டு. நிரந்திர கணக்கு எண் என்று அறியப்படும் பான் கார்டு ஒதுக்கீடு அடுத்த ஐந்து நாட்களுக்கு வழங்கப்படமாட்டாது.

மென்பொருள் வடிவமைப்பை மேம்படுத்துவதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பான் கார்டு கோரி வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.