1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Pakistan Open to Ceasefire If India Halts Attacks, Says Foreign Minister Ishaq Dar

இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்: பாகிஸ்தான் அமைச்சர்..!

இந்தியா
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்ததாவது, “இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் அதைப் பற்றி சிந்திக்கத் தயார்” என கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், முடிவெடுக்கும் முக்கியமான அதிகாரம் இந்தியாவிடமே இருக்கிறது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
இதற்கு முன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபோயி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைக்க வேண்டியது முக்கியம் எனவும், அமைதிக்கான வழிகளை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
பின்னர், மார்கோ ரூபோயி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார்-உடனும் தொலைபேசியில் உரையாடினார். அந்த உரையாடலிலும் இஷாக் தார் இதே கருத்தை வலியுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
 
“இந்தியாவின் தொடர்ச்சியான தாக்குதலால் நாங்கள் பொறுமையை இழந்தோம். ஆகையால் எதிர்வினை காண்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் அமைதியை பரிசீலிக்க தயாராக உள்ளோம்” என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலைமைக்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டியது முக்கியம் எனும் பார்வை உலக நாடுகளிடையே உருவாகியுள்ளது.
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்