1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (12:45 IST)

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.


 

 
உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா எல்லை தண்டிய தாக்குதல் நடத்தியது. 
 
சர்ஜிகல் ஸ்டிரைக்கை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்ஷெரா பகுதியின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே, இன்று காலை 4 இந்திய முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இதற்கு இந்திய ராணுவம் தக்க பலதிடியும் கொடுக்கும் வகையில் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.