தொடர்புடைய செய்திகள்
- வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!
- 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு.. QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் ஹாலிவுட் பாடல் ஒலித்ததா? சிபிஎஸ்இ விளக்கம்
- எஸ்மா சட்டம் அமூல்!.. கேஸ் சிலிண்டரை பதுக்கினால் சிறை தண்டனை...
- கேஸ் தட்டுப்பாடா? சிலிண்டர் விலை ஏறுதா? கவலையே இல்லை.. Induction Stove இருக்கவே இருக்குது.. பொதுமக்கள் கூல்..!
- மோடி ஒரு போன்கால் செய்தால் போதும்.. ஈரான் - இஸ்ரேல் போர் நின்றுவிடும்: அமீரக தூதர்
பிரதமர் இஸ்ரேல் சென்றிருந்தும், ட்ரம்ப் ஈரானை பற்றி எச்சரித்திருந்தும் இந்தியா ஏன் சுதாரிக்கவில்லை: எரிவாயு பற்றாக்குறை குறித்து சிவசேனா எம்பி
மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு, தற்போது அரசியல் மோதலாக வெடித்துள்ளது.
பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள உணவகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது கடும் தாக்குதலை தொடுத்துள்ளன.
மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் தவறான திட்டமிடலே இந்த நெருக்கடிக்கு காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். சிலிண்டர் முன்பதிவு செய்ய 25 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற புதிய விதியையும், விலை உயர்வையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
போதிய இருப்பு இருப்பதாக அரசு கூறுவது பொதுமக்களை திசைதிருப்பும் செயல் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.
சிவ சேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, "அமைதி காலத்தில் அனைத்தும் தயார் என்று கூறும் அரசு, போர் என்று வரும்போது கைவிடுகிறது" என்று சாடியுள்ளார். பிரதமர் இஸ்ரேல் சென்றிருந்தும், ட்ரம்ப் ஈரானை பற்றி எச்சரித்திருந்தும் இந்தியா ஏன் இந்த நெருக்கடிக்குத் தயாராக இல்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Edited by Siva
