1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Operation Sindoor Still Active, Says Indian Air Force Amid India-Pakistan Ceasefire

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

Operation Sindhoor
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை வீழ்த்தும் நோக்கில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
 
"ஆபரேஷனில் சில முக்கியமான பணிகள் திட்டமிட்டபடி, திறமையுடன் முடிக்கப்பட்டுள்ளன. எப்போது, எப்படி நடந்தது என்பதற்கான முழு தகவலையும், சரியான நேரத்தில் வெளிப்படுத்தப்படும். அதுமட்டும் இல்லாமல், தற்போது நிலவும் சூழ்நிலையை தவறாக ஊகித்து, உண்மையல்லாத தகவல்களை பகிர வேண்டாம்," என்று விமானப்படை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
 
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தின் அடிப்படை காரணம், ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான். அதில் சுற்றுலா சென்ற 26 பேர் உயிரிழந்தனர். அதில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி வினய் நர்வால் உள்ளிட்டோர் இருந்தனர்.
 
இந்த தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் மே 7ஆம் தேதி இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' செயலியை தொடங்கியது. இதன்பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வழி தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்தன.
 
இந்த சூழ்நிலையை சமாளிக்க, அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளும் தற்காலிக சண்டை நிறுத்தம் ஒப்புக்கொண்டன.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!