வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 15 ஜூன் 2016 (16:41 IST)

மந்திரம் செய்த அத்தையின் தலையை துண்டித்த வாலிபர்

சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் மந்திர வாதம் செய்ததால் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்று தனது அத்தையின் தலையை துண்டித்து கொலை செய்த வாலிபர்.
 

 
கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த உதய் கோந்த் (28), சமீபகாலமாக உடல்நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஜால்கே கிராமத்தில் உள்ள கணவனை இழந்த அவரது அத்தையான புதான் பாய் (45) சிறிது காலத்திற்கு முன்பு உதய் கோந்துக்கு மந்திரவாதம் செய்துள்ளார்.
 
தனக்கு மந்திர வைத்ததால் தான் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது என்று கருதி உதய் கோந்த் கருதியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உதய் கோடரியுடன் புதான் பாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் தனது இரு மகள்களுடன் அங்கு இருந்துள்ளார்.
 
உடனே அவரது அத்தையை, உதய் கோந்த் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அருகிலிருந்த அவரது மகள்கள் தடுத்துள்ளனர். மேலும், உதய் கோந்த்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க புதான் பாய் அங்கிருந்து ஓடியுள்ளார்.
 
மகள்கள் இருவரையும் தாக்கிவிட்டு, புதான் பாயை விரட்டிச் சென்ற உதய் கோந்த் தான் கையில் வைத்திருந்த கோடாரியால் தனது அத்தையின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.
 
தற்போது உதய் கோந்த் தலைமறைவு ஆகியுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியின மக்களான இவர்கள் மூடநம்பிக்கையை கைவிட மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
 
தலை துண்டிப்பு, பெண், மந்திரம், சத்தீஸ்கர், Beheading, Woman, Sorcery, Chhattisgarh