செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 21 ஜூலை 2014 (13:47 IST)

பாபா அணு ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுகிறார் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தை (BARC) பார்வையிடுகிறார். அப்போது அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்ற பின்னர், பாபா அணு ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுவது இதுவே முதல் முறையாகும்.

ஜூலை 21 ஆம் தேதி பிற்பகல் மும்பை செல்லும் அவர் மாலையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.