1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mumbai Tuition Teacher Arrested for Burning Student's Hand Over Poor Handwriting

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பை
மும்பையின் மாலாட் பகுதியில் மூன்றாவது வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், தனது கையெழுத்து சரியில்லை என்பதால், டியூஷன் ஆசிரியை ஒருவரால் மெழுகுவர்த்தியால் சூடு வைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மாலாட் பகுதியில் ராஜேஸ்வரி என்ற ஆசிரியையிடம் அந்த சிறுவன் டியூஷன் படித்து வந்துள்ளார். ஒரு நாள், சிறுவனின் கையெழுத்து சரியில்லை என்று கூறி, ஆசிரியை ராஜேஸ்வரி மெழுகுவர்த்தியால் அவனது கையை சூடுபடுத்தியுள்ளார். இதனால் அலறி துடித்த அச்சிறுவன், வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறினார். சிறுவனின் தந்தை அதிர்ச்சியடைந்து, உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.
 
சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில், தான் சூடு வைக்கவில்லை என்றும், சிறுவன் நடிப்பதாகவும் கூறி ராஜேஸ்வரி சமாளிக்க முயன்றுள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில், கையெழுத்து சரியில்லை என்பதால் கண்டிப்பதற்காகவே சூடு வைத்ததாகவும், சிறுவனின் நன்மைக்காகவே இதை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
 
இந்த சம்பவம் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஆசிரியர்கள் மற்றும் டியூஷன் மையங்களை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு வலுவான கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பும், நல்வாழ்வும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் முக்கிய வலியுறுத்தலாக உள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!