வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2015 (12:19 IST)

பேருந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்து: 15 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.


 

மத்திய பிரதேசம் மாநிலம் ஹோஷானாபாத் மாவட்டத்தில் தனியார் பேருந்து  ஒன்று இந்தூரில் இருந்து பராசியாவிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூருகின்றனர்.

காயம் அடந்தவர்களில் சிலரது நிலை மோசமாக காணப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.