ஜுலை 21: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜுலை 21ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர் மே 8ஆம் தேதிக்கு பதிலாக 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மே 13ஆம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜுலை 21ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது.
மழைக்கால கூட்டத் தொடரில் நிலம் எடுப்பு மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மேலும், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரம், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ராஜினாமா விவகாரம், மத்திய மனித வளதுறை மந்திரி ஸ்மிரிதி இரானி கல்வி சான்றிதழ் விவகாரம் போன்றவற்றை பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்ப தயராகி வருகிறது என கூறப்படுகின்றது.