வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (15:29 IST)

கொதிக்கும் சர்க்கரைப் பாகில் விழுந்த 3 வயது குழந்தை பலி

டெல்லியில் 3 வயது ஆண் குழந்தை ஒன்று சர்க்கரைப் பாகு தயாரிக்கும் பாத்திரத்தில் விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கிழக்கு டெல்லியில் உள்ள த்ரிலோக் புரி பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அவரது 3 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு மார்கெட்டில் பால் வாங்க சென்றிருக்கிறார்.
 
அப்போது அவருக்கு பின் வந்த ரிக்ஸா அவர் மீது மோத, தடுமாறிய தாயின் கையில் இருந்த குழந்தை எதிரே இருந்த இனிப்பு கடையின் சர்க்கரை பாகு தயாரிக்கும் பாத்திரத்தில் விழுந்தது. உடல் முழுவதும், காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது.
 
குழந்தையை காப்பாற்ற கொதிக்கும் சர்க்கரை பாகில் கைவிட்ட தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இச்சம்பவம் குறித்து மயூர் விகார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், தாயையும், மகனையும் இடித்த ரிக்ஸா  ஓட்டுனர் தலைமறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.