வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2015 (16:48 IST)

மேரிகோம் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு

இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம், ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக  அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து டெல்லி சமூக ஊடகப் பிரச்சார விழாவில் பேசிய மேரிகோம் 2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற விரும்புகிறேன் என்றும். ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன் அதனால் 2016 வரை விளையாட விரும்புகிறேன். அதன்பின்னர் இம்பாலில் பாக்சிங் அகாடமியை உருவாக்குவதில் கவனம் செலுத்த போவதாக கூறினார். மேலும் பாக்சிங் அகாடமி மூலம் ஏராளமான சாம்பியன்களையும் உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.