1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (08:37 IST)

60 வயது பெண் பலாத்காரம்: ஒருவர் கைது

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 60 வயதான மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 49 வயதுள்ள ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
 
கடந்த 6-ஆம் தேதி 60 வயதான அந்த மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது வீட்டில் நுழைந்த சபன் பிராமணிக் என்ற 49 வயதான ஒருவர் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதனையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் தன்னை பலாத்காரம் செய்த நபர் மீது புகார் தெரிவித்தார். இவரது புகாரின் அடிப்படையில் பாலியல் குற்றத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த காவல்துறை சபன் பிராமணிக்கை கைது செய்துள்ளனர்.