வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 7 ஜூலை 2014 (16:20 IST)

பைக் வாங்குவதற்காகத் தன் மனைவியை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்ற கொடூர கணவன்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவர் இருசக்கர வாகனம் வாங்குவதற்காகத் தனது மனைவியை ரூ 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

பிதூல் நகரில் கணவருடன் வசித்த தனது மகள் காணாமல் போனதாக, பெண்ணின் தந்தை காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தனது மனைவியை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கொடூர சம்பவம் தெரியவந்தது.

தனது மனைவிக்கு வேலை கிடைத்துள்ளததாகக் கூறி அந்த வாலிபர் தன் மனைவியை கடந்த 4 ஆம் தேதி போபாலுக்கு அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியிலே தனது சகோதரனின் வீட்டில் தனது குழந்தையை விட்டுவிட்டு சென்றுள்ளார்.

அங்கிருந்து ராஜ்காருக்கு தனது மனைவியை மட்டும் அழைத்துச் சென்று அங்குள்ள அரவிந்த் என்ற புரோக்கரிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு, தன் மனைவிக்கே தெரியாமல் விற்று விட்டு அங்கிருந்து ஓடி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, புரோக்கர் அரவிந்த் அந்த பெண்ணை திலீப் என்பவருக்கு விற்றுள்ளார். திலீப், அவரை கட்டாயமாக திருமணம் செய்து, அவருக்கு பல தொல்லைகளைக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், காவல்துறையினர் அந்தப் பெண்ணை அங்கிருந்து மீட்டு, அவரது தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், பெண்ணைக் கடத்தியது தொடர்பாக அந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களைத் தேடி வருகின்றனர்.

ஒரு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தன் மனைவியையே விற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையெ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.