1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (09:27 IST)

வீடு கட்டும் திட்டத்தில் மெத்தனம்! – அதிகாரியை விழா மேடையில் பணிநீக்கம் செய்த முதல்வர்!

மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற அம்மாநில முதல்வர் விழா மேடையிலேயே அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் நிவாரி என்ற பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது விழாவுக்கு வந்திருந்த மக்கள் பலர் மேடையில் இருந்த அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி பிரதமரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் அந்த அதிகாரி மந்தமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டினர்.

உடனே விழா மேடையிலேயே அந்த அதிகாரியை பணிநீக்கம் செய்வதாக உத்தரவிட்ட முதல்வர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அதிகாரி மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.