கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!
கர்நாடக மாநிலம் அனேகலில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கழிவறையில் நேற்று கேட்ட பலத்த சத்தம், அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இது டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தின் பரபரப்பான பின்னணியில் நடந்தது.
பள்ளியின் துணை நிர்வாகி டாக்டர் ஜெயப்பிரகாஷ், சத்தத்தின் காரணம் குண்டுவெடிப்பு அல்ல என்றும், சில மாணவர்கள் கழிவறையில் தீபாவளி பட்டாசுகளை வெடித்ததே காரணம் என்றும் தெளிவுபடுத்தினார். திங்கட்கிழமை காலை 10:10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஒரு பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தனர். இருப்பினும், இது குண்டுவெடிப்பு அல்ல, பட்டாசு சத்தம் மட்டுமே என்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ததால், பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.
Edited by Mahendran