1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kerala Takes Strict Action: 51 Government Doctors Dismissed for Unauthorized Leave

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

கேரளா
கேரளாவில் முறையாக பணிக்கு வராமல், நீண்ட நாட்களாக சட்டவிரோதமாக விடுமுறையில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இது குறித்துத் தெரிவித்ததாவது: "சட்டவிரோதமாக விடுமுறையில் இருந்த இந்த மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால், மருத்துவ பணிகள் பாதிக்கப்படுவதைக்கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது" என்று கூறினார்.
 
அரசு மருத்துவர்கள் உரிய அனுமதி இல்லாமல் நீண்ட விடுமுறையில் செல்வது, மருத்துவமனைகளில் ஊழியர்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது. இந்த கடுமையான நடவடிக்கை, மற்ற அரசு ஊழியர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!