வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 1 மார்ச் 2017 (11:05 IST)

பாவனாவை பாலியல் தொல்லை செய்து எடுக்கப்பட்ட வீடியோ எங்கே? - தேடுதல் முயற்சியில் போலீசார்

நடிகை பாவனாவை காரில் வைத்து ஒரு கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை போலீசார் தேடி வருகின்றனர்.


 


சமீபத்தில் நடிகை பாவனா மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளி பல்சர் சுனி உட்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
 
அப்போது, காருக்குள் வைத்து பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை செல்போனில் வீடியோவாகவும் அந்த கும்பல் எடுத்தது.  அந்த செல்போன் எங்கே என போலீசார் விசாரித்த போது,  வழக்கு சூடு பிடித்த நிலையில், அந்த செல்போன் முக்கிய ஆதரமாக மாறிவிடும் என்பதற்காக அதை கொச்சி ஏரியில் வீசி விட்டோம் என குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.
 
எனவே, ஏரி நீரில் மூழ்கிய அந்த செல்போனை எடுப்பதற்கு, போலீசார் கடற்படையை சேர்ந்த நீர் மூழ்கி வீரர்களின் உதவியை நாடினர். எனவே, தற்போது 5 வீரர்கள் அடங்கிய குழு கொச்சி ஏரியில் மூழ்கிய செல்போனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர, இந்த செல்போன் முக்கிய ஆதரமாக இருப்பதால், அதை எப்படியாவது பெறும் முயற்சியில் கேரள போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.