வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By இளவரசன்
Last Modified: செவ்வாய், 20 மே 2014 (14:10 IST)

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பரபரப்பு தகவல்கள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
 
திருவனந்தபுரம் அருகே வர்கலா, பட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (53). இவரது மனைவி சதி (45). துபாயில் பணிபுரிந்து வந்த சுரேஷ்பாபு, கடந்த வருடம் ஊருக்கு வந்தார். பின்னர் வர்கலாவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் கார் டிரைவராக பரமேஸ்வரன் (30) என்பவர் பணிபுரிந்து வந்தார். 
 
நேற்று முன்தினம் இரவு சுரேஷ்பாபு வீட்டில் தலையில் அடிபட்டு கிடப்பதாக அவரது மனைவி சதி வர்கலா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் சம்பவ இடம் வந்து பார்த்த போது, சுரேஷ்பாபு இறந்து கிடந்தார்.  
 
இந்நிலையில், சுரேஷ்பாபுவின் கார் டிரைவர் பரமேஸ்வரன் வர்கலா காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பரமேஸ்வரனுக்கும், சுரேஷ்பாபுவின் மனைவி சதிக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.
 
இதை அறிந்த சுரேஷ்பாபு மனைவியை கண்டித்துள்ளார். இதை சதி, பரமேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சுரேஷ்பாபுவை பரமேஸ்வரன் தடியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். அப்போது சதியும் உடன் இருந்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் சதியை கைது செய்தனர்.