வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (12:31 IST)

தொழிலாளி உயிருடன் புதைக்கப்பட்ட விபரீதம்

மத்தியப்பிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
மத்தியப்பிரதேச மாநிலம் கான்டி பகுதியி்ல் சாலையோரம் இருந்த பள்ளத்தை நிரப்பும் பணியில் ஜே.சி.பி.இயந்திரம் ஒன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஜே.சி.பி.இயந்திரத்தின் ஓட்டுநருக்கு உதவியாக, கூலித் தொழிலாளி ஒருவர் பள்ளத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
 
அப்போது எதிர்பாரதவிதமாக அந்தக் கூலித் தொழிலாளி பள்ளத்தினுள் விழுந்துள்ளார். இதனைக் கவனிக்காத ஜே.சி.பி. ஓட்டுநர் தொடர்ந்து மண்ணை அள்ளி பள்ளத்தை நிரப்பியுள்ளார்.
 
இந்தநிலையில் கூலித்தொழிலாளி திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த அந்த ஓட்டுநர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மூடிய பள்ளத்தை மீண்டும் தோண்டினர்.

அப்போது மண்ணில் புதைந்த நிலையில் கூலித் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. உயிரிழந்த அந்த தொழிலாளியின் பெயர் லத்தோரி லால் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.