திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 1 நவம்பர் 2025 (10:37 IST)

அரசு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை: முதல்வர் அதிரடி உத்தரவு..!

அரசு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை: முதல்வர் அதிரடி உத்தரவு..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
அரசு நிர்வாகத்தில் நிலைத்தன்மையை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பொறுப்பை கடைப்பிடித்தல், மற்றும் உள்நாட்டு பொருட்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த உத்தரவு நோக்கமாக கொண்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
கூடுதலாக, முதல்வர் பிறப்பித்த மற்றொரு முக்கிய உத்தரவின்படி, அரசுக்கு சொந்தமான கர்நாடக பால் கூட்டமைப்பின் 'நந்தினி' தயாரிப்புகளை தலைமை செயலகம் உட்பட அனைத்து அதிகாரப்பூர்வ கூட்டங்களிலும் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.
 
இந்த நடவடிக்கை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதுடன், உள்ளூர் கூட்டுறவு நிறுவனமான KMF-ன் தயாரிப்புகளை ஊக்குவித்து, மாநில பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
 
Edited by Mahendran