செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (15:58 IST)

காவிரி விவகாரம்; வயதானவர் கெஞ்சியும் தாக்குதல் நடத்திய கொடூரம் : வீடியோ

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை முன்னிறுத்தி, கர்நாடகாவில், கன்னட அமைப்பினர் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்களும், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் தாக்கப்படுகிறது.  


 

 
கர்நாடக எல்லைப் பகுதியில் செல்லும் வாகனங்களை மறித்து, அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்துகிறார்கள்.
 
இந்நிலையில், அப்படிச் சென்ற ஒரு வாகனத்தை நிறுத்திய அவர்கள், அந்த வாகனத்தின் ஓட்டுனர் முதியவர் என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை கன்னடம் பேச சொல்லி அவர்கள் வற்புறுத்தியுள்ளார்கள். ஆனால் அவர் எனக்கு கன்னடம் தெரியாது என்று கூறியுள்ளார். 
 
அந்த முதியவர் அவர்களிடம் கெஞ்சியும், இரக்கமில்லாமல் ஒருவர் அவரை கன்னத்தில் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
 
அந்த அதிர்ச்சி வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
நன்றி : நியூஸ்7