1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Justice Yashwant Varma Resigns Amid Cash Row Controversy and Removal Proceedings

கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக எழுந்த புகார்.. நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா..!

Justice Yashwant Varma
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, பண விவகார சர்ச்சையில் சிக்கியதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அவர் மீது உள்விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். தனது கடிதத்தில், ஆழ்ந்த மனவேதனையுடன் இந்த முடிவை எடுப்பதாகவும், உடனடியாக பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வர்மா தங்கியிருந்த இடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் பணக்கட்டுகள் மீட்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்திருந்தார்.
 
இந்த விசாரணை குழுவிற்கு எதிராக நீதிபதி வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் சட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கூறி அவரது மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
 
பதவி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்த சூழலில், அவர் தானாகவே முன்வந்து ராஜினாமா செய்திருப்பது நீதித்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்குதா? ஏப்ரல் 16 முதல் செயல்படாமல் போக வாய்ப்பு..!