வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 14 அக்டோபர் 2015 (15:41 IST)

ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறார்; ஸ்டாலின் பணி செய்து வருகிறார் - சொன்னதும் ஸ்டாலின்தான்

ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறார். ஸ்டாலின் ஆய்வு பணி செய்து வருகிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் தொடர்சியாக மு.க.ஸ்டாலின் இன்று பெரம்பலூர் சென்றடைந்தார். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து என்.எஸ்.கே. மகால் வரை நடைபயணம் சென்றார்.
 
அங்கு மகளிர் சுய உதவிக்குழுவினரை சந்தித்து பேசுகையில், ”நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மோசமான சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது.
 
ஆட்சியாளர்கள் ஆட்சி செய்யாமல் கொடநாடு சென்று ஓய்வு எடுத்து வருகிறார்கள். ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறார். ஸ்டாலின் ஆய்வு பணி செய்து வருகிறார்.
 
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் குறைகளை கேட்பது திமுக மட்டும் தான். திமுக ஆட்சி காலத்தில் தான் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டது. எனவே திமுக என்றென்றும் அவர்களுக்கு துணை நிற்கும்.
 
சுய குழுவினருக்கு செல்போன்கள், சிம்கார்டுகள், கொடுப்பதாக அறிவித்துள்ளனர். அப்படி செல்போன் கொடுக்கும் போது அதனுடன் வழங்கப்படும் சிம் கார்டில் முதல்வரின் நம்பருடன் வழங்கினால் பணிகளில் உள்ள நிறை குறைகளை அவரிடம் சொல்ல ஏதுவாக இருக்கும். அப்படி கொடுத்தால் நாங்களும் பாராட்டுகிறோம்” என்றார்.