1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 14 நவம்பர் 2014 (09:37 IST)

ஜவகர்லால் நேருவின் 125ஆவது பிறந்த நாள்: நினைவிடத்தில் குடிரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 125 ஆவது பிறந்த தினமான இன்று நேருவின் நினைவிடத்தில் குடிரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
 
ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில், குடிரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
 
நேருவின் பிறந்த தினம் ஆண்டு தோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி டீன் மூர்த்தி பவனில் மாலையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சாதனை குழந்தைகளுக்கு விருதுகள் வழங்குகிறார்.
 
நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் நவம்பர் 17, 18 ஆகிய நாட்களில் சர்வதேச மாநாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த மாநாட்டில் இந்தியா மற்றும், வெளி நாடுகளில் இருந்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். எனினும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.