வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (05:16 IST)

ஜல்லிக்கட்டு தடையை நீக்க உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக கோரிக்கை

தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக மனு தாக்கல் செய்துள்ளது.
 

 
தமிழகத்தில், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், ஒரு சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.
 
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை மனு தாக்கல் செய்து, இடைக்கால தடை பெற்றனர்.
 
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில், தேமுதிக வக்கீல் ஜி.எஸ்.மணி மனு  தாக்கல் செய்தார்.