வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2015 (22:25 IST)

இதெல்லாம் ஒரு தோல்வியா? பொன்னார் நச்

பீகாரில் பாஜகவுக்கு தோல்வியே இல்லீங்க என பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
பீகாரில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் நிதீஷ்குமார்- லாலுபிரசாத் யாதவ் கூட்டணி அமோக வெற்றி வெற்று ஆட்சி அமைக்க உள்ளது. பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் படுதோல்வியை சந்தித்ததது.
 
இந்த நிலையில், சென்னையில் பாஜக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பீகார் மாநிலத்தில், பாஜகவுக்கு எதிராக முதல்வர் நிதிஷ்குமாரும், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் ஒன்று சேர்ந்து போட்டியிட்டனர். மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், அங்கு மக்களை பாஜஜவுக்கு எதிராக துாண்டி விட்டனர். அதனால்தான் அவர்களால் வெற்றி பெற முடிந்தது.
 
ஆனால், ஓட்டு சதவீதத்தை பார்க்கும் போது, பாஜக பெற்றது குறைவான வாக்குகள் அல்ல. நிதிஷ்குமார் -லாலு கூட்டணி பெற்ற ஓட்டுக்களை விட பாஜக அதிக வாக்குகளையே வாங்கியுள்ளது. எனவே, இதெல்லாம் ஒரு தோல்வியே இல்லை என்றார்.
 
ஆமாங்க சார்...!