1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (16:05 IST)

பார்க்கிங் குறித்து புகாரளித்தால் ரூ.200 சன்மானம்

சாலைகளின் ஓரத்தில் சட்ட விரோதமாக பார்க் செய்யப்படும் வாகனங்கள் குறித்து புகார் அளித்தால் ரூ.200 சன்மானம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 


 
சாலைகளின் ஓரத்தில் சட்ட விரோதமாக பார்க் செய்யப்பட்டும் வாகனங்களுக்கு தற்போது ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அபராதம் 1000 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். ஏற்கனவே மோடார் வாகனம் சட்டத்தில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதைத்தொடர்ந்து கடுமையான சட்டதிட்டங்களை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக பார்க் செய்யப்பட்டிருக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து, புகார் அளிப்பதற்கான அரசு வலைதளத்தில் பதிவிட்டால், 200 ரூபாய் சன்மானம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.