வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2015 (21:15 IST)

மோடியை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்ய சதி: மத்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!

பிகார் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை, மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்ய சதி நடப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு (ஐ.பி.) எச்சரித்துள்ளது.
 

 
நாளை பிகார் மாநிலம் பாட்னா மற்றும் முசாபர்பூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவக்குகிறார். இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஸ்ரீபெரும்பத்தூரில் மனிதவெடிகுண்டு மூலம் கொலை செய்ததை போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இதனால் பிரதமரின் பயணம் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி பாட்னாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அங்கு தொடர் குண்டுகள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.