வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 4 ஜூன் 2015 (10:39 IST)

ஒடிசாவில் பயிற்சி விமானம் விபத்து: அதிர்ஷ்டவசமாக விமானிகள் உயிர்தப்பினர்

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் பயிற்சி விமானம் ஒன்று ஒடிசாவில் விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமாக பல பயிற்சி விமானங்கள் உள்ளது. இதில், ஒரு பயிற்சி ஜெட் விமானம், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிசோயி என்னும் இடத்தில் சென்ற போது, எதிர்பாரதவிமாதக அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
 
விபத்துக்குள்ளான அந்த அந்த பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் விழுந்ததால், தீப்பற்றி பரவியது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
ஆனால், பயிற்சி விமானத்திலிருந்த விமானிகள் இருவரும், பாராசூட் உதவியுடன் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிவிட்டனர். இந்த விமான விபத்து குறித்து  விசாரணைக்கு விமானத்துறை உத்தரவிடுள்ளது.