வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (15:36 IST)

14 வயது சிறுமியை பணத்துக்காக விற்ற கணவன்

14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட ஒருவர், அச்சிறுமியை வேறு ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் பணத்திற்கு விற்ற கொடுமை மும்பையில் நடந்துள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலத்தின் பனாரஸ் பகுதியை சேர்ந்த ஒரு 14 வயது சிறுமி, டில்லியில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் வசித்து வந்தார். அந்த சிறுமியை அங்கிருந்த அழைத்து சென்ற உறவினர் ஒருவர், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
 
அந்த சிறுமியை மும்பை அழைத்து வந்த கணவர், ஒரு வீட்டில் ரூ.50 ஆயிரம் பணத்திற்கு விற்றுவிட்டார். அந்த இடத்தில் வீட்டு வேலை செய்வதற்காக அந்த சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார் என்பது சிறுமிக்கு பிறகுதான் தெரியவந்துள்ளது.
 
வேலை செய்ய மறுத்த அந்த சிறுமியை அவரின் கணவர் மற்றும் விலைக்கு வாங்கிய பெண்ணும் கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்த அந்த சிறுமி, இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
 
வீட்டு வேலை செய்து வந்த இடத்தின் அருகே வசிப்பர்கள் அறிவுரைப்படிதான் தான் போலீசாரிடம் புகார் கொடுத்ததாக அந்த சிறுமி கூறியுள்ளார்.
 
சிறுமியின் தலையில் சில காயங்கள் இருந்தன. எனவே போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.