செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 14 மே 2015 (19:26 IST)

கிராம பஞ்சாயத்து தீர்ப்பு - கணவன், மனைவி உயிருடன் எரித்துக் கொலை

பீகாரில் கிராம பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பினால் கணவரும், அவருடைய 16 வயது மனைவியும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
பீகார் மாநிலத்தில் உள்ள கயா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவருக்கு அவரது உறவினரின் மகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஜெயராமிற்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது.
 

 
இந்நிலையில் உறவினரின் மகளுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் முதல் மனைவி கணவர் மீது கிராம பஞ்சாயத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
 
இதனை விசாரித்த பஞ்சாயத்து பெரியவர்கள் அவர்கள் இருவரையும் எரித்துக் கொல்ல உத்தரவிட்டனர். அதன் படி முதல் மனைவியின் உறவினர்கள் ஜெயராமையும் அவரது 2வது மனைவியான இளம்பெண்ணையும் உயிருடன் தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.