1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 20 ஜூன் 2016 (18:04 IST)

முதல்வருக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி திடீர் உண்ணாவிரதம்

முதல்வருக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி திடீர் உண்ணாவிரதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக டெல்லி கிழக்கு தொகுதி எம்பி மகேஷ் கிரி மற்றும் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 
டெல்லி நகராட்சி அதிகாரி எம்எம் கான் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்பி மகேஷ் கிரிக்கு தொடர்பு உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.
 
தன் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரத்தை வெளியிடக் கோரி, நேற்று மாலை முதல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு, பாஜக டெல்லி கிழக்கு தொகுதி எம்பி மகேஷ் கிரி தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்தப் போராட்டத்தில் பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கலந்து கொண்டு அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனால், டெல்லி தலைநகரம் அரசியல் புயலில் சிக்கியுள்ளது.