1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2016 (23:32 IST)

ஜல்லிக்கட்டு: மோடிக்கு அழுத்தம் கொடுங்கள் மக்களே... சொல்வது சரத்குமார்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றேதீர வேண்டும்.
 
ஒவ்வொரு நாளும் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு உருவாகி வருகிறது. தங்கள் வாழ்நாளில் ஜல்லிக்கட்டையே பார்த்திராத மக்களும் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கூட தெரியாதவர்களும் கூட அதனைத் தடுக்க நினைப்பது மிகப்பெரிய பாவச் செயல் ஆகும்.
 
தமிழ் இனத்துக்கு விரோதமாக தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஒரு கூட்டம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது.
 
எனவே, ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் தமிழக அரசியல் இயக்கங்கள் ஓரணியில் திரள வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் உணர்வை பிரதமர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.