வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2016 (19:52 IST)

கேட்ட பணத்தை கொடுக்க தவறியதால் கடத்தப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவன் கொலை

ரூபாய் 10 கோடி கேட்டு கடத்தப்பட்ட ஐதராபாத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் அபாய் மொதானி கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்டுள்ளான்.


 
 
ஐதராபாத்தை சேர்ந்த அபாய் மொதானி நேற்று முந்தினம் மதியம் வெளியே சென்றான். மாலை வரையும் வீட்டுக்கு வராததால், மாணவனின் பெற்றோர்கள் பதற்றமடைந்தனர். இவர்கள் அப்பகுதியில் மறுசுழற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
 
மாலை வரை வீடு திரும்பாத சிறுவனை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில் சிறுவனை கடத்தியவர்கள் ரூ.10 கோடி கேட்டு பெற்றோரை மிரட்டினர். பின்னர் ரூ.5 கோடிக்கு இறங்கிவந்தனர் கடத்தல்காரர்கள்.
 
இதற்கிடையில் சிறுவனை அவர்கள் இருச்சக்கர வாகனத்தில் கடத்தில் செல்லும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி கிடைத்தது காவல் துறைக்கும். இந்த காட்சி மற்றும் கடத்தல்காரகள் சிறுவனின் பெற்றோருக்கு பேசிய போன் கால் போன்றவற்றை வைத்து 10 தனிப்படை வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர் காவல் துறையினர்.
 
இந்நிலையில் கடத்தல் காரர்கள் சிறுவனை கொலை செய்தனர். சிறுவனின் உடல் செகந்திராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள டிவி பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை செய்தவர்கள் சிறுவனின் தந்தையின் நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் ஊழியர் என சந்தேகிக்கப்படுகிறது.
 
சிறுவனை கடத்தி கொலை செய்தவர்களை பிடிக்க காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.