1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Former ED Officer Who Arrested Kejriwal and Hemant Soren Joins Reliance Group

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் ED அதிகாரி
முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட்  முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை அமலாக்கத்துறை  அதிகாரியாக இருந்து கைது செய்து சர்ச்சையை கிளப்பிய கபில் ராஜ், தற்போது தனது அரசு பணியை விட்டு விலகி, ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.
 
மத்திய அரசின் IRS அதிகாரியாக பணிபுரிந்த கபில் ராஜ், விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்குப் பிறகு, அவர் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
 
கபில் ராஜ் பணியில் இருந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைது நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்தார். இந்த கைதுகள் தேசிய அளவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தின.
 
அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனியார் நிறுவனங்களில் சேருவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கபில் ராஜ் ஒரு முக்கிய அரசியல் தலைவர்களின் கைதுக்கு பிறகு இந்த முடிவை எடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
 
கபில் ராஜின் இந்த புதிய பயணம், அரசியல் மற்றும் பெருநிறுவன உலகத்தின் உறவுகளைப் பற்றிய விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சப் இன்ஸ்பெக்டர் தலை வெட்டிக்கொலை! கொலையாளியை என்கவுண்ட்டர் செய்த போலீஸ்!