செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Modified: சனி, 10 மே 2014 (11:29 IST)

வாரணாசியில் இறுதி கட்ட பிரச்சாரம்: மோடிக்கு எதிராக ராகுல் ரோடு ஷோ

நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேரணி நடத்தி வருகிறார்.
இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓயும் நிலையில், பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ராகுல் காந்தி இன்று காலை முதல் ரோடு ஷோ தொடங்கியுள்ளார். நேரு அணிந்திருந்ததைப் போன்ற தொப்பியை அணிந்து கொண்டு, திறந்த ஜீப்பில் அவர் ஊர்வலமாக செல்கிறார்.
 
கடந்த திங்கட்கிழமை ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கு மோடி சென்று ராகுலின் குடும்பத்துக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாரணாசியில் ராகுல் காந்தி பேரணி நடத்துகிறார்.
 
காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ ராகுல் காந்தி காலை முதல் தொடர்ந்து பல இடங்களில் பேரணி நடத்தி வருகிறார். நேற்று கெஜ்ரிவாலும், அதற்கு முந்தைய நாள் மோடியும் வாரணாசியில் பேரணி நடத்திய நிலையில் இன்று ராகுல் காந்தியும் பேரணி நடத்துவதால் வாரணாசி பரபரப்பான தொகுதியாகிவிட்டது.
 
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோல் கட்டா என்ற இடத்திலிருந்து ராகுல் காந்தி தனது பேரணியை துவங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்க்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக அவர் வலம் வருகிறார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று வாரணாசியில் இரண்டாவது நாளாக ரோடு ஷோ நடத்த உள்ளார். லங்கா பகுதியிலிருந்து மதியம் அவர் தனது பேரணியை துவக்குகிறார்.