1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2015 (18:55 IST)

மசாஜ் செய்வதாக கூறி பலமுறை கற்பழித்த போலி மந்திரவாதி கைது

மந்திர சக்தி மூலம் மசாஜ் செய்வதாக கூறி பெண்ணை பலமுறை கற்பழித்த போலி மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மும்பை வடாலா பகுதியை சேர்ந்த 37 வயது பெண் அடிக்கடி கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த பெண்ணிற்கு சமீபத்தில் சாந்திலால் ஷா (56) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனால் அவரிடம் தனது கால் வலி குறித்து அந்த பெண் கூறியுள்ளார்.
 
அப்போது, சாந்திலால் ஷா தான் ஒரு மந்திரவாதி என்றும், தனக்கு  நோய்களை குணமாக்கும் மந்திர தந்திர வித்தைகள் தெரியும் எனவும், அந்த மந்திர வித்தைகள் மூலம் அந்த பெண்ணினது கால்வலியை குணமாக்குவதாகவும் கூறியுள்ளார்.
 
இதனை நம்பிய அந்த பெண் சாந்திலால் ஷா அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு வாழைப்பழ மசாஜ் என்ற பெயரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி மசாஜ் செய்துள்ளார். தொடர்ந்து அப்பெண்ணின் உணர்வுகளை தூண்டி பலமுறை கற்பழித்துள்ளார்.
 
இந்நிலையில், சாந்திலால் ஷா அந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தராவிட்டால் செய்வினை வைத்து விடுவதாக கூறி மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்துபோன அப்பெண் கடந்த 5ஆம் தேதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
 
அப்போது மயங்கி கிடந்த அந்த பெண்ணை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் அப்பெண் உயிர் பிழைத்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் வடாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சாந்திலால் ஷாவை கைது செய்தனர். விசாரணையில் சாந்திலால் ஷா போலி மந்திரவாதி என்பது தெரியவந்தது. இதனையடுத்து மேலும் பலரிடம் இதுபோல் நடந்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.