நிலநடுக்கத்தால் வட மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு
நிலநடுக்கததிற்கு, இந்தியாவின் வட மாநிலங்களில் உயிரிழந்தோர் என்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முற்பகல் 11.46 மணியனவில் நேபாளத்திலும் வட இந்தியாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது.
இது இந்தியாவின் பல மாநிலங்களில் உணரப்பட்டன. சென்னையிலும் இது லேசாக உணரப்பட்டது.
இந்நிலையில், இந்த நில நடுக்கததிற்கு உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.