1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 16 ஏப்ரல் 2016 (12:20 IST)

தாயை வெறித்தனமாக அடிப்பதை தட்டிக்கேட்ட மகன்: குத்திக் கொலை செய்த தந்தை

தாயை வெறித்தனமாக அடிப்பதை தட்டிக்கேட்ட மகன்: குத்திக் கொலை செய்த தந்தை

உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் வந்த தந்தை தனது தாயை கொடூரமாக தாக்குவதை சகித்துக் கொள்ள முடியாமல் தடுக்க முயன்ற மகன் குத்திக் கொல்லப்பட்டார்.


 

 
உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ளது துர்திப்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அர்க்கான்.
 
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நாள்தோறும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியை மிருகத்தனமாக அடித்து, கொடுமைப்படுத்தி வந்தார்.
 
வழக்கம்போல, குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார்.
 
இதைப் பாரத்த அவர்களின் மகன் ஃபைஸான் தனது தந்தையை தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அர்க்கான், அங்கிருந்த கத்தியை எடுத்து ஃபைஸானை குத்தினார்.
 
இந்த தாக்குதலால், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஃபைஸான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றிஅவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமைறைவாக உள்ள அர்க்கானை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.