வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 9 ஜனவரி 2016 (16:44 IST)

முஸ்லிம்கள் ஒத்துழைப்புடன் ராமர் கோவிலா? - சுப்பிரமணிய சாமிக்கு எதிராக மாணவ அமைப்பு போராட்டம்

முஸ்லிம்கள் ஒத்துழைப்புடன் ராமர் கோவிலா? - சுப்பிரமணிய சாமிக்கு எதிராக மாணவ அமைப்பு போராட்டம்

முஸ்லிம்கள் ஒத்துழைப்புடன் ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறியுள்ளதற்காக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக டில்லியில் காங்கிரஸ் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
 

 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய சுப்பிரமணிய சாமி, ”ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரும் என நாங்கள் நம்புகிறோம். அந்த தீர்ப்பு வந்தவுடன் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கும்.
 
ராமர் கோவில் கட்டும் பணியை விஷ்வ இந்து பரிஷத் முயற்சி செய்யப்போவதில்லை. ஏனெனில், ராமர் பிறந்த பூமியில் ராமர் கோயிலை கட்டுவது ஒவ்வொரு இந்துவின் கடமை. இந்து மற்றும் முஸ்லிம்களின் பரஸ்பர ஒப்புதலுடன் ராமர் கோவில் கட்டப்படும்” என்று கூறியிருந்தார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் இன்று டில்லி பல்கலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இங்கு இன்று ராமர் கோயில் தொடர்பான நடக்கும் ஒரு கருத்தரங்கில் சாமி பங்கேற்று பேசுவதற்காக வந்துள்ளார்.
 
இவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கூடியதால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.