வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (11:56 IST)

சசிகலா புஷ்பாவின் அந்த புகைப்படங்கள்: அதிரடி உத்தரவை பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்றம்!

சசிகலா புஷ்பாவின் அந்த புகைப்படங்கள்: அதிரடி உத்தரவை பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்றம்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்தான அவதூறு செய்திகள் மற்றும் அவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீப காலமாக அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.


 
 
இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை தடுக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனு ஒன்றை தாக்கல் செய்தார். கடந்த மாதம் 19-ஆம் தேதி ஒருவர் என்னை எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்தார்.
 
ராஜினாமா செய்யவில்லை என்றால் சமூக வலைத்தளங்களில் என் நடத்தையைப் பற்றி தவறான வதந்திகளையும், குற்றசாட்டுகளையும் பரப்பப்போவதாக மிரட்டினார். எனவே என்னைப்பற்றிய அவதூறான செய்திகள், படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
இதனை விசாரித்த நீதிபதி சசிகலா புஷ்பாவின் அவதூறு படங்களை உடனடியாக சமூக வலைத்தளங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும் என கூறினர். மேலும், அவதூறு ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் வெளியிடுவதும், செய்தி வெளியிடுவதும் தடை செய்யப்படுகிறது.