செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (19:27 IST)

காலையில் காவல் அதிகாரி; மாலையில் மன்மதன்! – டெல்லியில் சிக்கிய போலீஸ் அதிகாரி!

டெல்லியில் மாலை வேளைகளில் பெண்களை பின் தொடர்ந்து சில்மிஷ செயல்களில் ஈடுபட்ட காவல் அதிகாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென்மேற்கு டெல்லியின் துவாரகா பகுதியில் சாலையில் தனியாக செல்லும் பெண்களை மர்ம ஆசாமி ஒருவர் பின் தொடர்வதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் மர்ம ஆசாமி ஒருவர் தன்னை காரில் பின் தொடர்ந்து வந்து முகவரி ஒன்றை கேட்டதாகவும், அதை சொல்ல முயன்றபோது தனது கால்சட்டையை அவிழ்த்து உறுப்பை காட்டியதாகவும், தான் சத்தம் போட்டதும் அவர் ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பெண்களின் தொடர் புகாரால் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம ஆசாமியை கண்டுபிடித்தபோது அவர்களுக்கே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சில்மிஷ காரியங்களில் ஈடுபட்டவர் டெல்லி போலீஸ் துணை ஆய்வாளர் புனீத் க்ரேவல் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து க்ரேவல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.